ஐநூறு ருபாய் இருக்குமா?
போன வாரம் நான் Romain Roland Library போயிருந்தேன். ரொம்ப bore அடிச்சுது. எதாவது ஒரு புத்தகம் எடுத்து படிக்கலாம் நெனைச்சு தேடிகிட்டிருந்தேன். அப்ப "கல்கி களஞ்சியம் - தொகுப்பு I" புத்தகம் இருந்தது.
கல்கியோட படைப்புகளை நான் அதிகம் படிச்சதில்லை. இன்னும் சொல்லனும்னா ரெண்டே ரெண்டு படைப்புகள் தான் படிச்சியிருக்கேன். ஓண்ணு ஒரு சிறுகதை - பத்து வருஷத்துக்கு முன்னாடி குமுதம் தீபாவளி மலரில் வந்தது. அந்த தீபாவளி மலரில் வந்த கதைகளை நான் இன்னும் மறக்கவில்லை. அப்ப இருந்த பெரிய எழுத்தாளர்களிடம் அவங்களுக்கு பிடிச்ச கதைகளை கேட்டு பிரசுரம் பண்ணியிருந்தார்கள். அந்த கதைகளை இன்னொரு வலை பதிவில் எழுதறேன்.
கல்கியின் "சிவகாமியின் சபதம்" நாவலை சமீபத்தில் படிச்சேன். மகேந்திர பல்லவரையும் நரசிம்ம பல்லவரையும் என் கண் முன்னாடி வந்து நிறுத்தியது அந்த நாவல். இந்த நாவலை பற்றியும் சொல்லறேன்.
இப்படி கவரப்பட்டு தான் இந்த "கல்கி களஞ்சியம் - தொகுப்பு I" புத்தகத்த தேரிந்தெடுத்தேன்.
இந்த புத்தகத்துல அவரோட தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் இருந்தன. "ஐநூறு ருபாய் இருக்குமா?" - என்பது ஒரு தலையங்கம். எழுதப்பட்ட வருஷம் 1933.
நமக்கு இப்ப தான் தெரியுது பங்குன்னா (Share) என்ன பங்கு சந்தைனா என்னன்னு. கல்கி இதை பற்றி அப்பவே அருமையா விவரித்திருக்கார்.
அந்த வருஷம் சர்கார் (உங்கள அந்த காலத்துக்கு கொண்டு போறேன்) Reserve Bank of India (RBI) ஆரம்பித்த வருஷம். ஒரு சுவாரசியமான தகவல் - RBIயோட முதலீடு எவ்வளவு தெரியுமா? வெறும் 500 கோடி ருபாய் தான். RBI பொதுவுடமை (Public) வங்கி ஆக்கப்பட்டது. மொத்தம் 5 லட்சம் பங்குகள் விற்க்கப்பட்டன. ஒரு பங்கின் விலை 100 ரூபாய்.
கல்கி 500 ரூபாய் இருக்குதான்னு கேட்டதுக்கு காரணம் இது தான். வசதி படைத்தவங்க (500 ரூபாய் அப்ப பெரிய பணம்) 500 ரூபாய் வெச்சியிருந்தாங்கனா 5 பங்குகள் வாங்குங்கன்னு கேட்டுகிட்டார். இதற்க்கு காரணம் அவர் என்ன சொல்லரார்னா - இந்த பங்குகள் மூலம் நாம் RBI ன் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதோடு நம் பணமும் பத்திரமாக இருக்கும்.
Thats கல்கி.
ஆனந்த விகடனில் "ஓ பக்கம்" எழுதற ஞானியும் இது மாதிரி நல்ல தகவல்களோட எழுதரார்.
வர்டா!
0 Comments:
Post a Comment
<< Home